தனிநபர் தகவல்கள் திருடுவதை தடுக்க புதிய ஏங்குதளம் – IIT நிறுவனம் வெளியிட்ட சூப்பரான தகவல்!!
தற்போது Android, iOS ஏங்குதளங்கள் மொபைல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக தற்போது தனிநபர்களின் தகவல்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. அதனால் இதனை தடுக்கும் விதமாக புதிய ஏங்குதளத்தை IIT நிறுவனம் உருவாகியுள்ளது.
தனிநபர் தகவல்
தற்போதைய ஸ்மார்ட் போன்களில் Android, iOS ஏங்குதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏங்குதளத்தின் வாயிலாக சைபர் க்ரைம் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக தனிநபர்களின் வங்கி கணக்கு, ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது. இந்த தகவல்களை வைத்து சேமிப்பு பணமும் திருடப்படுகிறது.
தமிழகத்தில் ஜன. 26 குடியரசு தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு!
இந்த நிலையில், இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இந்தியாவிற்காக பிரத்தியோக BharOS ஏங்குதளத்தை ஜாங்கிய ஆப்ரேஷன் நிறுவனத்தின் உதவியுடன் சென்னை IIT உருவாக்கியுள்ளது. இந்த புதிய ஏங்குதளத்தை சென்னை IIT இயக்குனர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக சென்னை IIT இயக்குனர் கூறியிருப்பதாவது, புதிதாக BharOS ஏங்குதளமானது முதற்கட்டமாக IITயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த புதிய ஏங்குதளம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.