பட்ஜெட் 2023: வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு? நிதியமைச்சர் வெளியிட போகும் அறிவிப்பு!
மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் கொரோனா பரவல், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை இளைஞர்கள் கொண்டுள்ளனர்.
நடப்பு நிகழ்வுகள் – 20 ஜனவரி 2023 | 20th January 2023 Current Affairs!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இந்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு வரிகளில் தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வருமான வரி விதிகளின் கீழ், வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் 5 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டும். இந்த நிலையில், கொரோனா பரவல், பணவீக்கம் ஆகியவற்றால் வருமான வரி விலக்கு வரம்பில் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயரும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.