தமிழக பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனம் வாயிலாக கற்றல் – அமைச்சர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் கற்றலை எளிதாக்கும் வகையிலான புதிய முறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தினார்.
புதிய தொழில்நுட்ப முறை:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் பொருட்டு அடுத்து 2023 ஆம் கல்வியாண்டு எண்ணற்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
Follow our Twitter Page for More Latest News Updates
அந்த வகையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்த ஜப்பான் நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப சாதனத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரத்தில் நாளை (ஜன.9) அனைத்து பள்ளிகளும் இயங்கும் – வெளியான முக்கிய அறிவிப்பு!
இதனையடுத்து தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி கற்கும் முறை இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் இனி வரும் நாட்களில் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாகும் என்று கூறப்படுகிறது. தற்போது ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் புதிய சாதனங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.