மீண்டும் சீனாவை பதம் பார்க்கும் கொரோனா.. இந்திய அரசு மாநிலங்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!
தற்போது சீனா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவில் கோவிட் பரிசோதனைகளை தீவிரமாக்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் ஆனது பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பிற்குள்ளானது. ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்துதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு கட்டங்களை அரசு முன்னெடுத்ததை தொடந்து கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் கவனத்திற்கு .. டிச.23ம் தேதி மின்தடை அறிவிப்பை வெளியிட்ட மின்வாரியம்!
Exams Daily Mobile App Download
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை கொரோனா பரவலில் இருந்து தற்போது மக்கள் மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. நோய் பரவல் வேகம் எடுத்துள்ளதால் சீனாவின் பல மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கோவிட் பரிசோதனைகளை தீவிரமாக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கொரோனா மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துமா என அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.