தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இன்றே (டிச. 8) கடைசி நாள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்திய குடிமக்களின் ஜனநாயக கடமைகளுள் ஒன்று வாக்களிப்பது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அல்லது நீக்க இன்றே (டிச. 8) கடைசி நாள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல்
இந்திய குடிமகன்கள் 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அல்லது நீக்கம் செய்ய தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த மாதம் 9 ஆம் தேதி முதல் பணிகள் தொடங்கியது. மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான பணிகளுக்கு கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடி அமைக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
Follow our Instagram for more Latest Updates
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் கடந்த 1-ந்தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த பணியானது இன்று (டிச 8) உடன் முடிவடைய இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் செய்யாதவர்கள் உடனே மனு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உச்சகட்ட விலையேற்றத்தில் தங்கம் .. கிராம் ரூ.5,000ஐ தாண்டியது – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பரிசீலனை செய்யப்பட்ட முடிவுகள் அடிப்படையிலான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கி இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது