அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு? – வந்துள்ள புதிய தகவல்! எழும் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் ஊதியமும் வெகுவாக அதிகரிக்கும்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் விலைவாசியை பொறுத்து ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் வருடத்தின் 2ம் முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 38 சதவீதம் அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். மத்திய அரசை தொடர்ந்து உத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் விரைவில் 2023 ஆண்டு தொடங்க உள்ளதால் புத்தாண்டு பரிசாக மத்திய அரசு அகவிலைப்படியை மேலும் உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் – ஒரு வாரத்தில் 54.55 லட்சம் பேர் இணைப்பு!
Exams Daily Mobile App Download
தற்போதைய ஊடக தகவலின் படி 2023 ஆம் ஆண்டு அகவிலைப்படி 3 முதல் 5% வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை அகவிலைப்படி உயர்ந்தால் அதன் தொடர்ச்சியாக ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புறம் 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை இன்னும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.