சபாஷ் சரியான ஆளை சண்டைக்கு தயார் செய்துள்ள பிக் பாஸ் – புதிய போட்டியாளரின் என்ட்ரி! இனி பிக் பாஸ் வீடு அதகளம் தான்!
பிக் பாஸ் வீட்டில் தற்போது 35 நாட்களை தாண்டி போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், புதிய வைல்டு கார்டு என்ட்ரியாக ஒருவரை களம் இறக்க பிக் பாஸ் வீடு திட்டமிட்டுள்ளது.
வைல்டு கார்டு:
பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அதன்பிறகு ஒரு வாரம் கழித்து மைனா நந்தினி வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். அதன்பிறகு நிகழ்ச்சி களை கட்ட தொடங்கியது. இந்த முறை ஆரம்பத்திலேயே அதிக போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இனி வைல்டு கார்டு என்ட்ரியாக யாரும் வரமாட்டார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
திருமணத்தை நிறுத்திய ஜனனியை பழி வாங்க குணசேகரன் போட்ட கொடூர திட்டம் – எதிர் நீச்சல் அப்டேட்!
Exams Daily Mobile App Download
ஆனால், பிக் பாஸ் வழக்கம் போல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல் புது வைல்டு கார்டு என்ட்ரி ஒருவரை இறக்க திட்டமிட்டுள்ளார். தனியார் யூடுயூப் சேனல் விஜே பார்வதி தான் அந்த நபர். இவர் போன ஆண்டு ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். அந்த நிகழ்ச்சியிலேயே சக போட்டியாளர்களுடன் பலத்த கருத்து மோதலில் ஏற்பட்டு வந்தார்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் பார்வதி வந்தால் ரகளைக்கு குறைவிருக்காது என்று பலரும் ஆர்வமாக உள்ளனர். விஜய் டிவியின் டிஆர்பி பார்வதி மூலம் எகிற இருப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் பார்வதி பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.