திருமணத்தை நிறுத்திய ஜனனியை பழி வாங்க குணசேகரன் போட்ட கொடூர திட்டம் – எதிர் நீச்சல் அப்டேட்!
சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நடந்துள்ள காட்சிகளை வைத்து இனி, அதிரடியாக பல மாற்றங்கள் வர உள்ளது உறுதியாகியுள்ளது. அதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்:
சன் டிவியில் இரவு நேர ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல், தற்போது மிகவும் பரபரப்பான காட்சிகளை ஒளிபரப்பாக்கி வருகிறது. ஆணாதிக்க குணம் கொண்ட குணசேகரனின் பிடியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தின் நிலை மோசமாக சென்று வருகிறது. ஜனனி மீது உள்ள கோவத்தால் அவரை பழி வாங்க நினைத்து, சக்திக்கு சிங்கப்பூர் பெண் குந்தவையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் குணசேகரன்.
பாரதி கண்ணம்மாக்கு End.. ஹீரோ அருண் நடிக்கவுள்ள புது சீரியல் – அதுவும் இந்த ஹீரோயின் கூடவா?
Exams Daily Mobile App Download
இதற்காக பல சதித்திட்டம் செய்து திருமணத்தை ஊருக்கு வெளியில் இருக்கும் கோயிலில் செய்ய நினைக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில் இந்த திருமணத்தை ஜனனி தடுத்து நிறுத்தி விடுகிறார். இதனால் குணசேகரன் ஜனனி மீது மிகுந்த கோவத்தில் இருக்கிறார். அவரை மேலும் பழி வாங்க திட்டம் போடுகிறார். இதனால், ஜனனி தனது கரியருக்காக வெளிநாடு செல்ல போட்ட பிளானை தடுக்க குணசேகரன் திட்டம் போடுகிறார். இதனால் இனி வரப்போகும் எபிசோடுகள் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.