தமிழகத்தில் தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய எச்சரிக்கை – சுகாதாரத்துறையினரிடம் இருந்து பறந்த உத்தரவு!
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து அதிகமான கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கல்லூரி கட்டணம்
இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் பயிலும் மாணவர்களில் 50% மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் ஆணை பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் தேசிய ஆணையத்துக்கு இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி ஆணை பிறப்பித்திருந்தது.
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் மறு ஆய்வு செய்து ஆணையை வெளியிடும் வரை தற்போது தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்பட்டு வரும் கட்டண நடைமுறையை அமலில் இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்லூரி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.
மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை திட்டம் – மாதம் ரூ. 3000.. – தெலுங்கானா அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.