வேலை நிறுத்தம் அறிவிப்பு.. ஸ்தம்பித்த மின்சாரத்துறை – வலுக்கும் எதிர்ப்புகள்!
மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் செயல்படுத்த தொடங்கியுள்ள தனியார் மயமாக்கல் நடவடிக்கை, பல தரப்பினரின் எதிர்ப்பை சம்பாதிக்கும் நிலையில், தற்போது புதிய அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது
தனியார் மயமாக்கல்:
நாட்டின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த ஆண்டின் நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தனியார் மயமாக்கல் குறித்து அறிவித்தார். அதாவது, அரசின் வாராக்கடன் நிலுவையை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார்.
முன்னதாக இந்த திட்டத்தில் 4 முக்கிய பொதுத்துறை வங்கிகள் தேர்வு செய்யப்பட்டு தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்க கடந்த ஆட்சி காலத்தில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது புதுவையில், மின்துறையை தனியார்மயமாக்கல் குறித்து நேற்று தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மின்துறை ஊழியர்கள் அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
அரசின் டெண்டர் அறிக்கையில், புதுவை அரசின் மின் வாரியத்தின் முழு பங்குகளையும் பெறுவதற்கு நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான முன்மொழிவுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.5.90 லட்சம் செலுத்த வேண்டும். மேலும், வங்கிக்கான செக்யூரிட்டி தொகையாக ரூ.27 கோடி செலுத்த வேண்டும் என்றும், ஏலத்தில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க நவம்பர் 25-ம் தேதி இறுதி நாள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்