இந்தியா விமான நிலைய ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.65,000 ஊதியம்..!
இந்தியா விமான நிலைய ஆணையம் (AAI) கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டும் இறுதி நாளுக்குள் வரவேற்க்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தேவையான தகுதி விவரங்களை தெரிந்து கொண்டு தங்களின் பதிவுகளை இன்றே செய்து முடிக்க கேட்டுக் கொள்கிறோம்.
Airports Authority of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்தியா விமான நிலைய ஆணையத்தில் (AAI) Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளது.
Exams Daily Mobile App Download
- Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் DGCA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட BAMEL / BAMEC License வைத்திருப்பவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் CAMO பதவிகளில் குறைந்தபட்சம் 02 வருடம் முதல் அதிகபட்சம் 05 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.65,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் இத்துடன் ரூ.1,500/- கூடுதல் தொகையாகவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
AAI விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.06.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணிக்கு என்று விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (26.06.2022) நிறைவு பெறுவதால் தகுதியானவர்கள் இன்றே தங்களின் பதிவுகளை செய்து பயனடையவும்.