ரூ.65,000/- சம்பளத்தில் விமான துறை வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
இந்தியா விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Airports Authority of India (AAI) |
பணியின் பெயர் | Consultant Continuous Airworthiness Manager (CAM) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்தியா விமான நிலைய ஆணையம் பணியிடங்கள்:
இந்தியா விமான நிலைய ஆணையத்தில் (AAI) Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
தகுதிகள்:
Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் DGCA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட License (BAMEL / BAMEC) வைத்திருப்பவராக இருப்பது அவசியமானது ஆகும்.
அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் CAMO பதவிகளில் குறைந்தபட்சம் 02 வருடம் முதல் அதிகபட்சம் 05 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
CAM வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
CAM ஊதிய விவரம்:
Consultant Continuous Airworthiness Manager (CAM) பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.65,000/- மாத ஊதியமாகவும், ரூ.1,500/- இதர ஊதியமாகவும் தரப்படும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
AAI தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
AAI விண்ணப்பிக்கும் விதம்:
இந்த விமான துறையை சேர்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.06.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.