Home news கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல் – வீட்டிற்குள் முடங்கிய மக்கள்!

கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல் – வீட்டிற்குள் முடங்கிய மக்கள்!

0
கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல் – வீட்டிற்குள் முடங்கிய மக்கள்!
கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல் - வீட்டிற்குள் முடங்கிய மக்கள்!
கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல் – வீட்டிற்குள் முடங்கிய மக்கள்!

கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கொரோனா பரவாமல் இருந்துவந்த சீனா நாட்டில் தற்போது கொரோனா தொற்று தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அரசும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதாவது முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களை பொது இடங்களுக்கு வர விடாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாஸ்க் அணிந்து தான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – வேறு யாராவது பயன்படுத்தினால் கண்டறிவது எப்படி?

இத்தகைய அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றியதால் தான் கொரோனா ஓரளவுக்கு குறைய ஆரம்பித்தது. மூன்று அலைகளை கடந்து தற்போது தான் கொரோனா ஓரளவுக்கு தொற்று குறைய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. நாளுக்கு நாள் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மாதத்தில் மட்டுமே 56,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சீனாவின் மிகப்பெரிய பொருளாதார நகரமான ஷாங்காயில் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், அத்தியாவசியமில்லாத அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வரவேண்டும் எனவும் மாஸ்க் அணியும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here