விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சண்டைகள் இல்லாமல் எபிசோடுகள் நகர்ந்து வருகிறது. இருப்பினும் அடுத்து வர உள்ள எபிசோடுகள் மிக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியலில் அடுத்த ட்விஸ்ட்:
விஜய் டிவியில் அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பட்டு வருகிறது, குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பலர் விரும்பி பார்ப்பார்கள். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை விறுவிறுப்பாக எபிசோடுகள் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள எல்லா கதாபாத்திரமும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு மளிகை கடை வைத்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள், இப்போ ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டிவிட்டார்கள்.
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய ‘பாக்கியலட்சுமி’ – ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!
இந்த கட்டிடம் கட்டும்போது பல பிரச்சனைகள் வந்தது. ஆனாலும் சமாளித்து ஒரு வழியாக கட்டி முடித்துவிட்டு கடை சிறப்பு விழா எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்றது. கஷ்டங்களை எல்லாம் தாண்டி குடும்பத்தில் அனைவரும் எப்படி முன்னேறுகின்றனர் என்பது சீரியலின் முக்கிய கதையாக உள்ளது. மேலும் கடந்த வாரம் மீனாவின் அப்பாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இனிமேல் வேலை செய்யக் கூடாது என டாக்டர் சொல்கின்றனர். அதனால் ஜீவா மீனாவின் அப்பா கடையை பார்த்து வருகிறார். அண்ணன் தம்பிகளுக்கு இடையே இதுவரை எந்த விரிசலும் இல்லாத நிலையில் தற்போது ஜீவா பிரிந்து இருக்கிறார். அதனால் கதையில் பல திருப்பங்கள் வரப் போகிறது.
இந்நிலையில் தொடர்ந்து ஜீவா – மீனா பக்கம் கதை நகர்கிறது. மேலும் கண்ணன் தனக்கு பண தேவை இருப்பதாக ஐஸ்வர்யாவிடம் சொல்லியிருந்தார். அதற்கு ஐஸ்வர்யா நான் பார்த்து கொள்கிறேன் என கூறினார் . இதனால் ஐஸ்வர்யா சூப்பர் மார்க்கெட்டில் யாரிடமும் கேட்காமல் பணத்தை எடுத்து கண்ணனுக்கு எடுத்து கொடுப்பாரோ, இதன் காரணமாக ஐஸ்வர்யாவின் மீது திருட்டு பழி விழுமா? இதனால் குடும்பத்துக்குள்ள பிரச்சினை ஏற்படுமா என அடுத்த கட்டமாக கதை நகர உள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.