தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளையே கடைசி நாள்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நாளையே கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நாளையே கடைசி நாள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளையே கடைசி நாள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க நாளை (பிப்.22) கடைசி நாளாகும்.

அஞ்சல் காப்பீடு முகவர்:

அஞ்சல் நிலையங்கள் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தி பெறுகிறது. அஞ்சலகங்கள் வங்கிகளை விட கூடுதல் வட்டி விகிதங்களை அளிப்பதால் மக்கள் பெரும்பாலும் அஞ்சலகங்களில் கணக்கு தொடர ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது தொடர் வாய்ப்பு நிதி, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வைப்பு நிதி, கிராம சுராக்ஷ யோஜனா போன்ற திட்டங்களில் அதிகமான மக்கள் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மார்ச் 1ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

அந்த வகையில் தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைப்பெற்று வருகிறது. தற்போது காரைக்குடியில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள்போன்றோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

Post Office இல் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – அருமையான திட்டம்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். ரூ.5 ஆயிரத்துக்கு எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணியிடற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து அதனுடன் பான், ஆதார் அட்டை நகல், கல்வி தகுதி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலமாக பிப்ரவரி 22ம் தேதி (நாளை) அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!