Post Office இல் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – அருமையான திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் உள்ள மாதாந்திர வருமானத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்ட விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மாதாந்திர வருமானத் திட்டம்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு பொருளாதார ரீதியான பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் சேமிக்க தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் சேமிக்க தொடங்கினர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அதிகமான வட்டி தொகையை பெற முடிகிறது. இதில் குழந்தைகளுக்காக பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் முதலீடு செய்வதால் குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தலைதூக்கும் பிஏ 2 வைரஸ் தொற்று அச்சம்!
மேலும் குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவினங்களுக்கு ஏற்ற தொகையை சேமிக்க முடிகிறது. அஞ்சல் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு என்று செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டம் உள்ளது. இதனை தொடர்ந்து மாதாந்திர வருமானத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 6.6 வட்டி விகிதம் கிடைக்கிறது. இதில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அத்துடன் இந்த திட்டத்தில் சேமிப்பதால் ஒவ்வொரு மாதமும் வட்டி தொகை கிடைக்கிறது.
TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வெழுத விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் மொத்தமாக ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் 2475 ரூபாய் வட்டி தொகை கிடைக்கிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரூ.29700 வட்டி தொகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் வருமானம் கிடைப்பதால் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.