தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

0
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி சுற்றறிக்கை – தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்!

அதன்படி தமிழகத்தில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்தல் பரப்புரைக்காக அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்த பொதுக்கூட்டத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவார்களா? என்பதை உறுதி செய்ய முடியாது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் குறைந்து வருகிறது.

குளிர்கால ஒலிம்பிக் 2022 – 45 வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால் மீண்டும் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனாவான நியோகோவ் மற்றும் ஒமைக்ரான் தொற்றின் திரிபான பிஏ 2 வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு வகையான வைரஸ் தொற்றும் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் தேர்தல் முடிந்த பிறகு கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தொற்று மேலும் பரவாமல் இருக்க கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!