தமிழக அரசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
திருவள்ளூர் பூவிருந்தவல்லி வருவாய் துறை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி தற்போது கிராம உதவியாளர் (Village Assistant)பணிக்கு தற்போது காலி பணியிடம் நிரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்துள்ளோம். இதன் வாயிலாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tiruvallur poonamallee Revenue Department |
பணியின் பெ யர் | Village Assistant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்கு என்று மொத்தமாக இரண்டு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Village Assistant கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். மேலும் தமிழில் பிழையின்றி நன்கு படிக்க , எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.
கிராம உதவியாளர் வயது வரம்பு :
01.01.2022 அன்றைய தேதியின் படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.
Village Assistant ஊதியம் :
இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
கிராம உதவியாளர் தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்ட பின், Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Village Assistant விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் Biodata மற்றும் அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து நேரில் அல்லது தபாலில் பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 20.01.2022 அன்று மாலைக்குள் வந்து சேரும்படி அனுப்ப அறிவுறுத்தப்படுகிறீர்கள். கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.