தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி பார்க்கலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பில் 21 வகையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு – ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு!
இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் உள்ளது. இந்த 21 வகையான பொருட்கள் ஒரு மஞ்சப்பையில் வழங்க உள்ளதாக அரசு அறிவித்திருந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரயில் பயணிகளுக்கு அனுமதி – ஜன.10 முதல் அமல்!
மேலும் அநேக இடங்களில் பரிசு தொகுப்புகள் இருந்தும் துணி பைகள் வராததால் தொகுப்புகளை வழங்க முடியவில்லை. இது குறித்து தற்போது தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டில் இருந்து பை எடுத்து வந்து பொங்கல் தொகுப்பை பெற்று கொள்ளலாம். அத்துடன் பைகள் இன்றி பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு பின்னர் பைகள் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தனியாக டோக்கன் வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.