‘மெட்டி ஒலி’ உமாவின் நிறைவேறாத ஆசை இது தான்? நடிகை லீலா நெகிழ்ச்சி தகவல்!
சன் டிவி ‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா சமீபத்தில் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் அவரது சகோதரியும் நடிகையுமான லீலா நடிகை உமாவின் நிறைவேறாத ஆசைகள், அவரது நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை லீலா
பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி எக்கச்சக்கமான ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்த ஒரு முக்கிய சீரியல் ‘மெட்டி ஒலி’. ஒரு குடும்பத்தில் உள்ள 5 இளம் பெண்கள், அவர்களது திருமணம் ஆகியவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த ‘மெட்டி ஒலி’ சீரியல் மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஒரு முக்கிய சீரியலாக இருந்து வருகிறது. இந்த தொடரில் 5 இளம்பெண்களின் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை உமா மஹேஸ்வரி. தமிழ் சினிமா திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருந்த நடிகை உமா ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் மாமியாருடன் இணைந்த கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்!
தொடர்ந்து திருமணத்திற்கு பிற்பாடு சீரியலை விட்டு விலகிய இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இவரது உடல்நிலை மோசமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் சின்னத்திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இப்போது இந்த ‘மெட்டி ஒலி’ தொடரில் நடிகை உமாவுடன் நடித்திருந்த இவரது உடன் பிறந்த சகோதரியும், சின்னத்திரை நடிகையுமான லீலா உமாவின் மரணம், நிறைவேறாத ஆசை குறித்து ரசிகர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது, கடந்த 2020ம் ஆண்டிற்கு முன்னதாகவே நடிகை உமா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இது குறித்து அவர் கூறும் போது, நடிகை உமா இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த போது உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தார். அதனால் ஒவ்வொரு முறையும் உடல்நிலை மோசமாக எங்களுக்கு பயம் தொற்றிக்கொள்ளும். இந்தவாறு தான் 2 வருடங்கள் கடந்தோம். ஒவ்வொரு முறையும் அவளிடம் இருந்தும், அவரது வீட்டில் இருந்தும் போன் வரும் போது என்ன நடந்திருக்கும் என்று பயமாக இருக்கும்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!
அவள் மரணத்தை நேரில் பார்த்தது இன்னும் கூட என் கண்ணை விட்டு மறையவில்லை. உமாவுக்கு நிறைவேறாத ஆசை என்றால் குழந்தை இல்லை என்பது தான். ஆனால் குழந்தை இல்லை என்பதை அவர் வருத்தமாக நினைத்தது இல்லை. உமா எங்களுடன் இருப்பது போல எப்போதும் நினைத்து கொள்வோம். உமா அவரது கணவரை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டாள். அவரது கணவரும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்வார். அவர்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை. சந்தோஷமாக தான் இருந்தார்கள் என்று உமாவின் கணவர் மீதான சர்ச்சைக்கும் நடிகை லீலா விளக்கம் கொடுத்துள்ளார்.