TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், கல்வித்தகுதி, தேர்வு முறை & முழு விபரம் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்டவற்றை விரிவாக பார்க்கலாம்.
TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். TNPSC தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் 5831 காலிப்பணிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் குரூப் 2 தேர்வானது நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என இரண்டு வகையான பதவிகளுக்கு ஒரே தேர்வு தான் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை? முதல்வர் ஆலோசனை!
இதற்கான கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மேலும் சில கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். அதாவது தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு தட்டச்சு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கான வயது வரம்பு பொது பிரிவில் உள்ளவர்களுக்கு 20 முதல் 30 வயது உள்ளவராக இருத்தல் வேண்டும். மற்ற பிரிவினருக்கு 40 வயது வரை உள்ளவராக இருக்கலாம். குரூப் 2, 2A தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு வகையான தேர்வு நடைபெறும். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் அளிக்கப்படும். முதல்நிலைத் தேர்வு பொது அறிவு பகுதியில் 175 வினாக்களையும், கணித பகுதியில் 25 வினாக்களையும் என மொத்தமாக 300 வினாக்களை கொண்டுள்ளது. இதில் பொது அறிவு பகுதி பட்டப்படிப்புத் தரத்திலும் கணித பகுதியானது பத்தாம் வகுப்புத் தரத்திலும் கேட்கப்படும். மேலும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு 3 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படும். இத்தேர்வானது கொள்குறிவகையில் கேட்கப்படும். முதன்மை தேர்வு விரிவான எழுத்து தேர்வாக நடத்தப்படுகிறது.
இதில் பகுதி ‘அ’ மற்றும் பகுதி ‘ஆ’ என இரண்டு பகுதிகள் உள்ளது. இதற்கும் 3 மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படும். முதல் பகுதியில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்தலுக்கான வினாவும், இதையடுத்து ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தலுக்கான வினாவும் கேட்கப்படும். இதில் மொத்தம் 4 வினாக்கள் கேட்கப்படுகிறது. ஒரு வினாவுக்கு 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண் கொடுக்கப்படும். இதில் 25 மதிப்பெண் பெற்றால் தான் பகுதி ‘ஆ’ தாள் மதிப்பீடு செய்யப்படும். பகுதி ‘ஆ’-இல் சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் எழுதுதல் போன்ற வகையான வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.
திருக்குறளிலிருந்து கீழ்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட வினாக்களும் இடம்பெற்றிருக்கும்.
மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம், அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை, மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம், திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை, சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு, திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.
முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகைக்கான தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வுக்கான தலைப்புகள்
பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி வினாக்கள் ஆகிய தலைப்புகளில் இருந்து 300 வினாக்கள் கேட்கப்படும்.
தேர்வுக்கான பாடத்திட்டம்
தமிழ்நாட்டின் வரலாறும், மரபும், பண்பாடும்
தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்மொழி வளர்ச்சியில் சங்க கால இலக்கியமும் வரலாற்றுச் சான்றுகளும், தமிழ்நாட்டின் இசை மரபு, நாடகக்கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பகுத்தறிவு இயக்கங்கள், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி ஆகிய தலைப்புகளின் கீழ் வினாக்கள் கேட்கப்படும்.