தமிழகத்தில் டிச.19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!
திருச்சியில் 19.12 .2021 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலை நாடுநர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. வழக்கமாக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக அவ்வப்போது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும். இந்த கொரோனா தாக்கத்தால் அவை ரத்து செய்யப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை? இரவு ஊரடங்கு அமல்? மாநில அரசுக்கு ஆலோசனை!
தற்போது அரசு ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து டிசம்பர் 19ம் தேதி திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பிசப் ஹூபர் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் டிச.31 முதல் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – சுற்றுலா தலங்கள் மூடல்!
இந்த முகாமில் 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். தனியார் துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சுய விவரக் குறிப்புடன் வர வேண்டும். 10 மணிக்கு நாகர்கோவில் கோணம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. வேலை தேடுபவர்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்