TNPSC குரூப் 4 VAO, குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய விவரங்கள் & மாற்றங்கள்!
தமிழகத்தின் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 VAO மற்றும் குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டம், கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு பற்றிய முக்கிய விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தேர்வுகள் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக நடத்தப்படவில்லை. இதனால் தேர்விற்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குரூப் 4, VAO, குரூப் 2 தேர்வுகள் தமிழகத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் அரசு பணிக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு தேர்வுகளில் ஆங்கில மொழி விருப்ப தேர்வு நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு அதில் 40% மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.119 ரீசார்ஜ் திட்டத்தின் பலன்கள்! 300 SMS நீக்கம்!
தேர்வுகளில் தமிழ் மொழியின் பாடத்திட்டம் 10ம் வகுப்பு அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் பாட வினாத்தாளில் 40% மதிப்பெண்கள் பெறாதவர்களின் மற்ற வினாத்தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 4 தேர்வில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதில், 40 சரியான பதில்களை அளித்தால் மட்டுமே அடுத்த பகுதியான பொதுஅறிவு பகுதி மதிப்பிடப்படும். ஆனால் குரூப் 2 தேர்வில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் என்று இரண்டு கட்டங்கள் உள்ளது. அதில் முதன்மைத் தேர்வு நிலையில் தமிழ் மொழி வினாக்கள் இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டம்? அரசு ஆலோசனை!
அதன்படி தேர்வில் மொழிப் பெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் மற்றும் கட்டுரை வரைதல் பகுதிகள் 100 மதிப்பெண்களுக்கு இருக்கும். இந்த பகுதியில் இருந்து தேர்வர்கள் 40 மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். குரூப் 4 தேர்விற்கு தேர்வர்கள் 18 வயது முதல் 30 வரையும், கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வர்கள், பொதுபிரிவினருக்கு 20 முதல் 30 வரையும், மற்ற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அனைத்து விவரங்கள் மற்றும் மாற்றங்களையும் தேர்வர்கள் கவனித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.