‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிபர் தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்த நடிகை ஜெனிபர் தற்போது முதன் முறையாக தந்து குழந்தையுடன் தான் எடுத்து கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டீவியில் தற்போது பல திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தான் ஒளிபரப்பாகி வருகிறது. சாதாரண குடும்ப பெண்ணாக இருக்கும் பாக்கியா தனது குடும்பத்தினை எதிர்த்து தனது கனவுகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றி கொள்கிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் எழில் மட்டுமே இருந்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, பாக்கியாவின் கணவர் கோபி தனது கல்லூரி தோழியான ராதிகாவை விரும்புகிறார். தனது அப்பாவிற்கு இந்த விஷயம் தெரிந்தும் கூட அதனை பற்றி கவலைப்படாமல், ராதிகாவிடம் தனது காதலை பற்றியும் சொல்லுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி விலகியதற்கான உண்மையான காரணம் – ரசிகர்கள் ஷாக்!
இப்படி இந்த கதை விறுவிறுப்புடன் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் கோபியின் கல்லூரி தோழி ராதிகாவாக நடிகை ஜெனிபர் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே, ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்த பின்னர் தான் பெரும் புகழ் மற்றும் பெயர் கிடைத்தது. இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் அந்த சீரியலை விட்டு விலகினார். குழந்தை பிறந்ததற்கு பின்னர் இவர் நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!
இவருக்கு சமீப நாட்களுக்கு முன்பாக தான் தான் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது. அதன் பிறகும் கூட இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை தந்து சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது முதன் முறையை தனது மகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றனர்.