‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் துர்கா – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் குஷி!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் ட்விஸ்ட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தற்போது பலரும் எதிர்பார்த்து இருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்குமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் பழையபடி முன்னணியில் இருக்கிறது. புதிய கண்ணம்மாவாக நடிகை வினுஷா தேவி நடிக்க ஆரம்பித்த போது பலரும் அவரை நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் இடத்தில் வைத்து பார்க்க சிரமப்பட்டனர்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இமான் அண்ணாச்சி – திடுக் தகவல்! ரசிகர்கள் ஷாக்!
ஆனால், தற்போது வரும் காட்சிகளில் நடிகை வினுஷா சிறப்பாக நடித்துள்ளதாக பலரும் ப்ரோமோ வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவராலும் லட்சுமி மற்றும் ஹேமாவை பிரிந்து இருக்க முடியவில்லை. ஆனால், கோர்ட் உத்தரவின் காரணமாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கின்றனர். கண்ணம்மாவுடன் இருப்பதால் பாரதிக்கு பழைய நியாபகங்கள் வந்து விடுகிறது. அதனால் அதனை மறக்க வேண்டும் என்று குடித்து விட்டு கண்ணம்மா வீட்டிற்கு வந்து விடுகிறார்.
நடிகர் சிம்புக்கு காய்ச்சல், மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
ஆனால், கண்ணம்மா பாரதி மேல் கோபப்படாமல் அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார். இனி வெண்பா சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும் அவருக்கு உதவியாக மாயாண்டி இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இணைத்து வாழ வேண்டும் என்று நினைத்து துர்கா மீண்டும் வெண்பாவை மிரட்டுவார் என்பது போல கதைக்களம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் சீரியலில் அதிரடியான திருப்பங்களுக்கு பஞ்சம் இருக்காது.