சென்னையில் நாளை (டிச.3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பின் போது துணை மின் நிலையங்களில் மின் இணைப்புகள் சரிபார்த்தல், மின் கம்பிகள் மாற்றுதல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதம் மாற்றம்!
இது குறித்து மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றன. அதனால் மக்கள் மின்தடை குறித்து முன்னதாகவே அறிந்து வேலைகளை திட்டமிடுகின்றனர். அவ்வப்போது மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மின் கசிவு, அதனால் ஏற்படும் மின் விபத்துகள் தடுக்கப்படுகிறது. சென்னையில் ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டு மின் விநியோகம் தடைபட்டது. தற்போது சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – தமாகா முக்கிய கோரிக்கை!
அதனை தொடர்ந்து சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் நாளை (03.11.2021) மின் பராமரிப்பு காரணமாக தரமணி பகுதி, சி.எஸ்.ஐ.ஆர். ரோடு, எம்.ஜி.ஆர் நகர், தரமணி, கானகம் மெயின் ரோடு, வி.வி.கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.