தமிழக நீதிமன்றத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.20,600/-
தமிழ்நாடு நீதித்துறை சேவையின் கீழ் பெரம்பலூர் நீதித்துறை பிரிவில் காலியாக உள்ள Steno Typist Gr -III & Typist பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து பயனடையலாம் கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு நீதித்துறை சேவை |
பணியின் பெயர் | Steno Typist Gr -III & Typist |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின்படி தமிழ்நாடு நீதித்துறை சேவையின் பெரம்பலூர் நீதித்துறை பிரிவில் Steno Typist Gr -III (7) & Typist (4) பணிகளுக்கு 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வய தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விணபதர்களின் குறைந்தபட்ச வயதானது 18 ஆகவும் அதிகபட்சம் 35 ஆகவும் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
- Steno Typist Gr -III பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,600/- முதல் ரூ.65,500/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- Typist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- ஊதியம் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் இறுதியில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூரித்து செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.12.2021 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:- முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.