திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சியில் உள்ள தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரங்களில் மழை சற்று ஓய்ந்த நிலையில் தற்போது தெற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய தமிழக கடலோரத்தில் வளிமண்டல காற்று சுழற்சி நிலவுவதால் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்துள்ளது.
தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
அதனால் தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்ய தொடங்கிய கனமழை இடைவிடாது பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் கனமழை அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டிச.15 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம் – போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!
இதையடுத்து பலத்த மழை பெய்து வரும் தூத்துக்குடி, நெல்லை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு தென்காசி திருவாரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய கல்லூரி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்தால் கல்லூரி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் தேசிய கல்லூரி 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.