நவ.17 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – மாநில முதல்வர் உத்தரவு!
ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து புகை மண்டலமாக இருப்பதால் நவம்பர் 17ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவு:
கடந்த சில வருடங்களாக நாட்டின் வட மாநிலங்களில் அதிக அளவு காற்று மாசு பாடு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. சாலைகளை புகை மண்டலங்கள் மறைக்கும் அளவிற்கு காற்று மாசு அடைந்துள்ளது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து, மின் சாதனங்களின் பயன்பாடு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று அதிக அளவில் மாசு அடைந்து வருகிறது. காற்று மாசுபாடு வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு உச்ச நிலையில் இருக்கும். நடப்பு ஆண்டின் தீபாவளி பண்டிகை கடந்த வாரத்தில் முடிந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் புகை மண்டலங்கள் சூழ்ந்துள்ளது.
அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு – இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு!
நாட்டின் தலைநகரான டெல்லியில் கற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் காற்று மாசு அளவை குறைக்கும் நோக்கமாக, டெல்லி முழுவதும் கட்டுமானப் பணிகள் வரும் நவம்பர் 17ம் தேதி வரை நிறுத்தப்படும் என்றும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களும் 100% வீட்டில் இருந்து பணியை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரிக்கும் நிலையில், இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
இதேபோல், தற்போது ஹரியானா மாநிலத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் மாசுபட்ட காற்றை சுவாசிக்காமல் இருக்க இன்று முதல் நவம்பர் 17ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிகள் விடுமுறை அளித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்து உத்தரவிட்டுள்ளார், மேலும் இது தொடர்பாக, முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியை போல் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், ஜஜ்ஜார் ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது