‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து செய்யும் காரியம் – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் போட்டியாளர் நமீதா சமூக சேவையில் முழு மூச்சுடன் இறங்கி இருக்கிறார். இப்படி இருக்க சென்னையில் கொட்டும் மழையிலும் தெருவோரத்தில் வசிக்கும் நாய்களுக்கு அவர் உணவு கொடுப்பதை போல வெளியான வீடியோவுக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது.
பிக்பாஸ் நமீதா
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர் திருநங்கை நமீதா மாரிமுத்து. பெருமளவு மக்களால் தாழ்த்தப்படும், ஒதுக்கப்படும் திருநங்கை சமூகத்தை சேர்ந்த நமீதா ஒரு முன்னணி மாடல் ஆவார். இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த ஒவ்வொரு தடைகளையும் சாதனையாக மாற்றி மக்களின் நாயகியாக இன்று உருவாகி இருக்கிறார். இப்படி பலருக்கு முன் உதாரணமாக திகழும் நமீதா மாரிமுத்துவை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது விஐய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி தான்.
மக்களின் பலத்த ஆதரவுடன் ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்த இவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. அதுவும் இந்த சீசனில் நமீதா வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்கிற பேச்சுகளும் எழுந்து வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே இவர் வீட்டை விட்டு வெளியேறினார். இப்படி இருக்க பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையேடு சமூக சேவைகளில் இறங்கி இருக்கிறார் நமீதா.
கோபியை வெறுக்கும் ராதிகா, குழப்பத்தில் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
அந்த வகையில் சாலையோரங்களில் இருக்கும் வயதானவர்கள், முடியாதவர்கள் என பலருக்கும் உணவு பொட்டலங்களை வழங்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில் மீண்டுமாக நமீதா மாரிமுத்து, சென்னையில் கொட்டும் மழையிலும் தெருவோர நாய்களுக்கு உணவு வைக்கும் படியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் நமீதாவின் சேவையை பாராட்டும் விதமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.