![பாக்கியலட்சுமி' சீரியல் ஆர்யனை கரம் பிடித்த 'செம்பருத்தி' 'பாக்கியலட்சுமி' சீரியல் ஆர்யனை கரம் பிடித்த 'செம்பருத்தி' ஷபானா - கோலாகல திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/11/பாக்கியலட்சுமி-சீரியல்-ஆர்யனை-கரம்-பிடித்த-செம்பருத்தி.jpg)
‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஆர்யனை கரம் பிடித்த ‘செம்பருத்தி’ ஷபானா – கோலாகல திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!
ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து வந்த நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கும் நிலையில் இந்த திருமணம் குறித்து நடிகை ஷபானா வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை திருமணம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷபானா ஷாஜகான். இந்த ஒரே ஒரு தொடரின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்த நடிகை ஷபானா தமிழ் சின்னத்திரை உலகில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருக்கிறார். கேரளா மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட இவர் தற்போது தமிழ்நாட்டின் மருமகள் ஆகி இருக்கிறார்.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து தற்போது கரம் பிடித்திருக்கிறார் ஷபானா. நடிகர் ஆர்யன் ஒரு சின்னத்திரை நடிகர் ஆவார். விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சயமான நடிகர் ஆர்யன் தற்போது விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாக்கியலட்சுமி’ யில் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கோபியை வெறுக்கும் ராதிகா, குழப்பத்தில் இருக்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
அந்த வகையில் நீண்ட நாட்களாக காதல் ஜோடிகளாக இருந்து வந்த நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானா இருவருக்கும் கடந்த மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று (நவ.11) இந்த காதல் ஜோடி திருமண பந்தத்துக்குள் நுழைந்திருக்கிறது.
இந்த தகவலை நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த வகையில் நடிகர் ஆர்யன் மற்றும் நடிகை ஷபானாவின் திடீர் திருமண விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் புதுமண தம்பதியருக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.