Post Office புதிய சேமிப்பு திட்டம் – தினமும் 34 ரூபாய் சேமித்தால் 5.32 லட்சம் வரை பெறலாம்!
அஞ்சல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பான சேமிப்பை நாம் செய்யலாம். இந்த நிலையில் நாம் அதிக வட்டி தர கூடிய சேமிப்பு திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அஞ்சலகங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது கடந்த மாதம் அக்டோபர் 1 ஆம் தேதி அஞ்சல் நிலைய கணக்குகளில் நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டது. அஞ்சலக முதலீடு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு திட்டம்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இந்த திட்டம் நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகள் உள்ளது. இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் வரை செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். தினமும் 34 ரூபாய் சேமித்து இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய தகுதியானவராகலாம்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தினமும் 34 ரூபாய் சேமிப்பதன் மூலம் மாதம் 1,054 ரூபாயை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு நீங்கள் சேமிக்கும் தொகை ரூ.1.80 லட்சம். அதற்கு வட்டியாக ரூ.1.45 லட்சம் சேர்த்து மொத்தமாக உங்களுக்கு கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீடித்தால் 5.32 லட்சத்தை முதலீடாக பெற முடியும். சிறிய தொகையை முதலீடு செய்து அதிக பணம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இத்திட்டம் சிறந்த திட்டமாகும்.