CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முதல் பருவ பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவ பொதுத்தேர்வு:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வை இரண்டு பருவங்களாக நடத்த முன்னதாக திட்டமிட்டது. அதன்படி, முதல் பருவ தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் என்றும், இரண்டாம் பருவ தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல் பருவ பொதுத்தேர்வில் பல தேர்வு வினாக்கள் மட்டுமே 90 நிமிடங்களுக்கு நடத்தப்படும் என்றும், இரண்டாம் பருவ பொதுத்தேர்வில் சிறு, குறு மற்றும் பெருவினாக்கள் பகுதி இடம் பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள் – வேளாண் சட்டம்!
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2021ஆம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் ஆஃப்லைனில் முதல் பருவ பொதுத்தேர்வை நடத்தவுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வுகள் நவம்பர் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 16 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது. கல்வி வாரியம் தேர்வுகளை நேரடியாக எழுத்து தேர்வாக நடத்த உள்ளது. ஆனால் கல்வி வாரியத்தின் இந்த முடிவிற்கு மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைனில் நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
மாதம் ரூ.6000 முதலீட்டில் ரூ.72 லட்சத்திற்கு மேல் வருமானம் – Post Office திட்டம் முழு விபரம்!
இந்த தேர்வின் போது, வினாத்தாள்களைப் படிக்க 20 நிமிடங்கள் வழங்கப்படும். தாள்கள் காலை 10:30 மணிக்கு பதிலாக 11:30 மணிக்கு தொடங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் தொடர்பான மற்ற விவரங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ இரண்டாம் பருவ பொதுத்தேர்வுகள் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு cbse.gov.in மற்றும் cbse.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.