![TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி! TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/TNPSC-தேர்விற்கு-தயாராகி-வருவோர்-கவனத்திற்கு-தமிழக-அரசு-768x576.jpg)
TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி!
தமிழகத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்து படித்து வரும் இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி:
தமிழகத்தில் உள்ள கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுத் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. அதனால் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
சென்னை: கடும் வீழ்ச்சியில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பல்வேறு விதமான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த பேராசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இந்த தன்னார்வ பயிலும் வட்டமானது பல்வேறு மாவட்டங்களில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பயிற்சி பெற்று கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 71 மாணவர்கள் பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த அமைப்பின் கீழ் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது.
குட்கா, பான் மசாலா விற்பனைக்கு நவ.7 முதல் தடை – மாநில அரசு அதிரடி!
இந்த பயிற்சியின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள 3,261 மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் அடங்கிய சுயவிபரத்தை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு நெறிமுறை மையத்தில் நேரிலோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம்.