தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி தரமான அரிசி! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி தரமானதாக வழங்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு அரசு செயல்படுவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழகத்தில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் சாதாரண நிலையில் உள்ள மக்கள் மிகவும் பயனடைகின்றனர். இந்த திட்டத்தில் முதலில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக 20 கிலோ அரிசியையும் இலவசமாக அரசு வழங்கி வருகிறது.
புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மொபைல் டிபிசி வாகனங்களை தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரத்திற்கும் தலா ஒரு மொபைல் டிபிசி தொடங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, சுற்று வட்டாரத்தில் உள்ள ரேஷன் அரிசி ஆலைகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசின் உத்தரவு படி டிபிசி ஒன்றுக்கு 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.
அனுவை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லும் பாட்டி, குஷியில் ரோஜா & அர்ஜுன் – பரபரப்பான அடுத்த எபிசோட்!
இதனால் மாநிலம் முழுவதும் டிபிசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 900 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த மாதம் மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களிடம் நெல்லின் ஈரப்பதத்தை 17ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளோம். அது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.