சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
சென்னையில் நேற்று (செப்டம்பர் 22) ஒரு நாளில் அதிரடியாக உயர்ந்திருந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 23) சவரனுக்கு ரூ.200 என குறைந்து சரிவை கண்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் தங்கநகைகளை வாங்கி செல்கின்றனர்.
இன்றைய விற்பனை
ஒவ்வொரு நாளும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் தற்போது திறக்கப்பட்டுள்ள நகைக்கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் ஊரடங்கு காலத்தில் நகை வாங்காதவர்கள், சுப காரியங்களுக்காக தங்க நகைகளை வாங்குபவர்கள் என பலரும் தற்போது நகைகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 31,923 பேருக்கு தொற்று! 282 பேர் பலி!
இதற்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யப்படும் ஆபரணத் தங்கத்தின் விலையானது மாறி வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிவை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட சவரனுக்கு ரூ.2 ஆயிரம் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று (செப்டம்பர் 22) ஒரு நாளில் மட்டும் திடீரென உயர்வடைந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.300 வரை அதிகரித்திருந்தது.
இனி டாஸ்மாக் கடைகளில் ‘இது’ கட்டாயம் – மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை!
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) காலை துவங்கியுள்ள ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் அதன் விலை மீண்டுமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 மட்டும் குறைந்து ரூ.35,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4,388 என விற்பனையாகிறது. மேலும் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.