கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு – மாநில அரசு அறிவிப்பு!
பஞ்சாப் மாநில அரசுத்துறைகளில் பணி செய்து வரும் ஊழியர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களை கண்டறியும் பொருட்டு அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை – முதல்வர் துவக்கி வைப்பு!
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், கொரோனா தடுப்பூசி செயல்திறனை முன்னிலைப்படுத்த, தடுப்பூசி போடாத பணியாளர்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டுள்ளர். இது தொடர்பாக, ‘கொரோனா தடுப்பூசிகள் அரசு ஊழியர்களை சென்றடையும் வகையில் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி போடுவதை தவிர்ப்பவர்கள் இப்போது முதல் டோஸ் பெறும் வரை விடுப்பில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை தேடுவோர் கவனத்திற்கு – தமிழக அரசு நிறுவனம் மூலம் வழிகாட்டுதல்!
இதனிடையே அடுத்து வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் கொரோனா எதிர்மறை சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம், பணிகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.