வெளிநாடுகளில் வேலை தேடுவோர் கவனத்திற்கு – தமிழக அரசு நிறுவனம் மூலம் வழிகாட்டுதல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெ.யு சந்திரகாலா தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும் பொது மக்களால் அவ்வளவு எளிதாக இயல்பு நிலைக்கு திரும்ப இயலவில்லை. படித்த இளைஞர்கள் வேலை தேடி அலையும் அவல நிலை உருவாகியுள்ளது. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் தொழில்கள், வேலைவாய்ப்புகளை அளிக்க முடித்த நிலையில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளனர். தற்போது இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் வேலையில்லா திண்டாட்டம் தொடர்கிறது.
TCS நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் – தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!
இந்த நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமானது வெளிநாடுகளில் பணிபுரிய தேவையான திறன்களை இளைஞர்களுக்கு அளிக்கிறது.
வங்கக்கடலில் உருவான புதிய புயல் சின்னம் – தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், கவனித்தல் போன்ற திறன்களை வளர்க்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு அயல்நாட்டு நிறுவனம் தரும் வேலைவாய்ப்புகள் குறித்தும், அதற்கான கல்வித்தகுதிகள் குறித்து இணையதளம் வாயிலாக அறியலாம். மேலும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிய ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.