BSNL பயனர்களுக்கு ஷாக் நியூஸ் – குறைந்த விலை ரீசார்ஜ் பிளான் நீக்கம்!
BSNL நெட்ஒர்க்கின் ரூபாய் 99 ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் BSNL ரீசார்ஜ் திட்டங்களின் கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
BSNL அறிவிப்பு:
இந்தியாவில் அரசு நிறுவனமான பிஎஸ்என்ல் நெட்ஒர்க் தனது ரீஜார்ச் பிளான்களில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ப்ரீபெய்ட் பிளான்களில் விலையை மாற்றாமல் அதற்கு பதிலாக அத்திட்டம் தரும் ஆபர்களை குறைத்துள்ளது. போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நெட்ஒர்க்கின் விலை குறைந்த திட்டமான ரூபாய் 99 போஸ்ட்பெய்ட் பிளானை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டம் முடியும் வரை இதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்த 99 ரீசார்ஜ் திட்டத்தை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் முடியும் போது ஒரு எஸ்எம்எஸ் அனுப்பபடும். அதன் பிறகு இந்த பயனர்கள் செப்டம்பர் 1 முதல் ரூபாய் 199 திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் 25 ஜிபி டேட்டா போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரூபாய் 49 எண்ட்ரி – லெவல் வவுச்சர் 48 நாட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 24 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? வேகமெடுக்கும் கொரோனா!
மேலும் ரூபாய் 75 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 60 நாட்களுக்கு பதிலாக 50 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூபாய் 94 STV 90 நாட்களுக்கு பதிலாக இப்போது 75 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ரூபாய் 106 மற்றும் ரூபாய் 207 வவுச்சர்கள் இப்போது 100 நாட்களுக்கு பதிலாக 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூபாய் 197 ப்ரீபெய்ட் திட்டம் 180 நாட்களுக்கு பதிலாக 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.