கொரோனா தொற்றை கையாண்ட விதம் காரணமாக – ஜப்பான் பிரதமர் பதவி விலகல்!
ஜப்பான் நாட்டில் கொரோனா தொற்றின் பரவலை முறையாக கட்டுப்படுத்த தவறி விட்டதால் அந்நாட்டின் பிரதமர் யோஷிஹிதோ சுகா பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர்:
உலகின் முதன்முதலில் கொரோனா தொற்று சீனாவில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து சில வாரங்களில் உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவியது. தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள அனைத்து நாடுகளும் திண்டாடி வருகிறது. ஆனால் தொடங்கிய சீனாவில் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி விட்டது. தொற்றை கட்டுப்படுத்த முடியாத நாடுகளின் பட்டியலில் ஜப்பானும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், ஜப்பானில் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இந்த ஆண்டில் நடந்து வருகிறது.
எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாஹித்ய புரஸ்கார் விருது – சாகித்ய அகாடமி அறிவிப்பு!
இருப்பினும், பார்வையாளர்கள் இல்லாமல், பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனாலும் சமீப காலத்தில் ஜப்பானில் கொரோனா தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு உடல்நிலை பாதிப்பால் பதவி விலகினார். அவருக்குப் பின், யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கொரோனா பரவலைக் கையாண்ட விதம் குறித்து அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் யோஷிஹிதே சுகா, இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நேற்று அறிவித்துள்ளார். தனது அரசு மீதான மக்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவரே பிரதமராக இருப்பார். அந்த வகையில், சுகாவின் ஓராண்டு ஆட்சி முடிவுக்கு வர இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. கட்சியின் அடுத்த தலைவரே புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.