எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாஹித்ய புரஸ்கார் விருது – சாகித்ய அகாடமி அறிவிப்பு!
தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளதாக சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.
சாகித்ய அகாடமி:
பால சாகித்திய அகாதமி விருது சாகித்திய அகாதமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளில், இந்திய எழுத்தாளர்களின் குழந்தைகள் இலக்கியத்தில் பங்களிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்தைய ஐந்து வருடங்களின் படைப்புக்களைக் கொண்டு இது முடிவு செய்யப்படுகிறது. விருதுக்கான தகுதிகளாக குழந்தைகள் புத்தகம் மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்க வேண்டும் குழந்தைகளுக்கான கட்டுக்கதை அல்லது கதை பொழுதுபோக்கு கருதி இருந்தால் அது தகுதி பெறும்.
2020ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய அகாதமி விருதினை எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு வழங்க கமலவேலன், ருத்ர துளசிதாஸ், யூமா வாசுகி ஆகியோர் கொண்ட நடுவர் குழு பரிந்துரைத்துள்ளது. புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என எழுதிவந்தவர் சிறுகதைகளிலும் தன் பங்களிப்பை செலுத்தி உள்ளார். 2000ம் ஆண்டு இவர் எழுதிய இதயத்தில் இன்னும் என்ற ஹைக்கூ கவிதைகள் நூல் வெளிவந்தது. இவர் சமூக அக்கறை கொண்ட பல சிறுகதைகளையும் எழுதி வந்துள்ளார். அதன்மூலமாகவே பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
TN Job “FB Group” Join Now
செய்தி ஊடகங்கள் சிலவற்றில் பணியாற்றியுள்ளார். தற்போது, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலுக்காக இவ்விருதை யெஸ்.பாலபாரதிக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. விருதுடன், தாமிர பதக்கம், 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை ஆகியவை யெஸ்.பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளது. புதையல் டைரி, துலக்கம், அன்பான பெற்றோரே, சந்துருவுக்கு என்னாச்சு, பூமிக்கு அடியில் ஒரு மர்மம் ஆகிய குழந்தை நூல்களை யெஸ்.பாலபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.