‘பேருந்துகள் இயங்காது, மதிய உணவு இல்லை’ – புதுச்சேரியில் செப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு!
புதுச்சேரியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குநர் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
14 பந்துகளில் அரைசதம், ருத்ர தாண்டவம் ஆடிய ஆண்ட்ரே ரசல் – IPL முன்னோட்ட விளாசல்!
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செம்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளை திறந்து மாணவர்கள் வருகைக்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் 9, 11 ஆம் வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் செயல்படும். அதேபோல் 10, 12 ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் செயல்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பள்ளி பேருந்துகளில் வரும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பேருந்துகள் இயங்கும், கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பள்ளி வரும் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் பள்ளி சார்பில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் கட்டாயமாக அரசின் நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அரசின் அடுத்த உத்தரவு இல்லாமல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது. பள்ளிகள் காலை 9 முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.