‘விரைவில் தென்மண்டலம் வருவோம்’ – ஜெயம் ரவிக்கு வந்தியத்தேவனாக கார்த்தி பதில்!
மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் ஜெயம் ரவியின் ட்விட்டர் பதிவுக்கு வந்தியத்தேவனாக நடிகர் கார்த்திக் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
முடியாது இளவரசே:
அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், இயக்குனர் மணிரத்னம் அவர்களால் படமாக்கப்பட்டு வருகிறது. இரண்டு பாகங்களாக அதனை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த படப்பிடிப்பு சில நாட்களாக தொடங்கப்படாமல் இழுபறியில் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் மற்றும் கார்த்தி போன்ற சில நடிகர்கள் மட்டுமே பங்கேற்ற படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தின் ஓர்ச்சாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜெயம் ரவி தனது ட் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ – வைரலாக்கும் ரசிகர்கள்!
அதாவது, உங்கள் புன்னகை, காமெடி பேச்சு மற்றும் அறிவுரைகள் என்றுமே மறக்க முடியாது. உங்களிடம் மீண்டும் பணியாற்ற காத்திருக்கிறேன் என இயக்குனர் மணிரத்னம் குறித்து பதிவிட்டார். மேலும் தன் வாழ்வில் இந்த படத்தின் மூலம் புதிய அத்தியாயம் தொடங்கி இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த பதிவுக்கு படத்தின் கதாபாத்திரமாகவே மாறி சுவரசியமாக நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முடியாது இளவரசே, உங்கள் பயணம் அதற்குள் முடிந்து விடாது, இன்னும் 6 நாட்களில் வடக்கே உள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு சோழ தேசமான தென்மண்டலத்திற்கு திரும்பி விடுவோம்” என பதிலளித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், வந்தியத்தேவனாக கார்த்தி பேசியிருப்பது இந்த படம் குறித்த ஆவலை மேலும் தூண்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபு , ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், விக்ரம், ஏ ஆர் ரஹ்மான் என டாப் சினிமா பட்டாளமே இணைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.