கரும்பிற்கான ஆதரவு விலை ரூ.290 ஆக அதிகரிப்பு – ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் விளக்கம்!
ஆண்டுதோறும் கரும்பிற்கான ஆதரவு விலையை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது கரும்பிற்கான ஆதரவு விலை 5 ரூபாய் உயர்த்தி 290 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஜவுளித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆதரவு விலை:
ஆண்டு முழுவதும் விளைவிக்கும் பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இருப்பினும் பொருட்களுக்கான விலையை அரசே நிர்ணயித்து வருகிறது. ஒரு குவிண்டால் கரும்பிற்கான ஆதரவு விலை ரூ.285 ஆக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ரூ.5 அதிகரித்து ரூ.290 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இது குறித்து ஒன்றிய அமைச்சரவையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிஎச்.டி., எம்.பில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம்!
ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது 2021 – 22 ஆம் ஆண்டில் அறுவடை செய்யப்படும் கரும்பிற்கான ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதன்படி 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.275 ஆதரவு விலையும், 10 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.290 ஆதரவு விலையும் வழங்கப்படும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டு 70 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எத்தனாலுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் பியூஷ் கோயல் கூறினார். ஒன்றிய அரசு மேற்கொண்ட இந்த முடிவின் காரணமாக 5 கோடி கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒன்றிய அரசு அளிப்பதாக கூறிய விலையை காட்டிலும் தமிழகம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலையை வழங்கி வருகிறது.