தமிழக 12ம் வகுப்பு துணைத்தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று முதல் விடைத்தாள் திருத்தம்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த விடைத்தாள்களை திருத்தம் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
விடைத்தாள் திருத்தம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவரும் நடப்பு ஆண்டு தேர்வின்றி தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் சில மாணவர்கள் மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் திருப்திகரமாக இல்லை என்று கருத்து தெரிவித்தனர். நேரடி தேர்வு நடைபெற்றிருந்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்போம் என்று கூறினர்.
JEE 2021 முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு – NTA வெளியீடு!
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. அதனை தொடந்து ஜூலை 23ம் தேதி முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் 36,000 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
TN Job “FB Group” Join Now
பிறகு நடப்பு மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை 12ம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. கொரோனா பேரிடரில் தேர்வு நடத்தப்பட்டுள்ளதால் விடைத்தாள் திருத்தத்தில் அதிக கெடுபிடி இல்லாமல் மாணவர்களின் திறனுக்கு ஏற்பவும், அவர்களின் விடையளிக்கும் தகுதியை ஆய்வு செய்தும், மதிப்பெண் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.