இந்திய பாதுகாப்பு படை பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு ரத்து – மத்திய அரசு!
இந்தியாவில் ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றுத்திறனாளிகள் நியமனம் கிடையாது என்றும் அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கை பெற்று கல்வி பயின்று பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு மினி பஸ் சேவைகள் – அமைச்சர் அறிவிப்பு!
கல்வி, வேலைவாய்ப்பை தொடர்ந்து விளையாட்டிலும் அவர்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடய அறிவியல், சைபர் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்படுகிறது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ஆலோசனை கூட்டம் ரத்து – திடீர் அறிவிப்பு!
இந்த நிலையில் மத்திய அரசு பாதுகாப்பு படை பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. மேலும் இனிமேல் மத்திய பாதுகாப்பு படைக்கோ, அல்லது யூனியன் பிரதேச பாதுகாப்பு படை பணிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.