பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் & கோப்பைக்கு தடை விதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய நெகிழி பைகள், கோப்பைகள், தட்டுகள் போன்றவற்றிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 2022 ஜூலை 1 ம் தேதி முதல் இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
நெகிழிக்கு தடை :
நாடு முழுவதும் நெகிழி பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறிய சாலையோர கடைகள் முதல் வணிக வளாகங்கள் முதல் நெகிழி பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நெகிழியால் சுற்று சூழல் மாசடைகிறது. நாம் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பைகள், கப்புகள்,தட்டுகள் போன்றவை மண்ணில் புதையுண்டு தங்கி விடுகிறது. இவை மக்கும் தன்மை அற்றவை. இந்த நெகிழியை விலங்குகள் உண்ணும் போது அவை உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
எனவே இதை பயன்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். இருந்த போதிலும் காய்கறி வியாபாரிகளில் இருந்து அனைவரும் நெகிழிகளை பயன்படுத்தி வருகின்றனர்.பயன்பாடு குறையவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பொது மக்களுக்கு நெகிழியின் தீமை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் நெகிழிக்கு பதிலாக சணல் பைகள், துணிப்பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த நெகிழிகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனால் ஏற்கனவே பல்வேறு மாநில அரசுகள் இந்த தடையை பிறப்பித்து. இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் நெகிழியை பயன்படுத்த கூடாது என தடை விதித்துள்ளது. 2022 ஜூலை 1 ம் தேதி முதல் இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்