அரசு மருத்துவமனையில் 73 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் – அலைமோதிய கூட்டம்!
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டதை அடுத்து, கொரோனா குறித்த எவ்வித அச்சமும் இன்றி அலைமோதிய கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேர்காணல் அழைப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சுமார் 73 பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடைபெற இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக தேவைப்படுவதால் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு ஈடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அலுவலர்கள் கவனத்திற்கு – தலைமைச் செயலாளர் கடிதம்!
அந்த வகையில் தற்பொழுது கடலூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் மருந்தாளர்கள், கதிர் வீச்சாளர் உட்பட 73 காலி பணியிடங்களுக்கான புதிய ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர். இப்பணிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நேர்காணல் மூலம் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இதை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 4) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.
TN Job “FB Group” Join Now
அங்கு நேர்காணலுக்கு வந்தவர்கள் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் அமர வைக்கப்பட்டனர். இருப்பினும் நேர்காணலுக்கு வரும் நபர்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அப்பகுதியில் கூட்டம் அலை மோதியது. அதனால் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மாற்று நாளில் இவை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கொரோனா விதிகள் மீறப்பட்டிருப்பது தொற்று பரவ கூடிய சூழலை உருவாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.