தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம்? மத்திய அரசு விளக்கம்!
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் பாஜகவினர் சிலர் கடந்த மாதம் கொங்கு நாடு குறித்த சர்ச்சைகளை கிளப்பினார். இது தொடர்பாக பெரும் சர்ச்சைகள் வெடித்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த செய்திகள் குறித்து தமிழ்நாடு எம்பிக்கள் எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துபூர்வமாக கேள்விகளை மத்திய உள்துறை இணையமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆகஸ்ட் 5ம் தேதி 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கூறுகையில், மத்திய அரசிடம் தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது இல்லை, என்றும் அதுகுறித்து எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெளிவுப்படுத்தியுள்ளார். இதனால் தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்படும் என்ற செய்திக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது போன்று வரும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் உண்மை நிலையினை அறியாமல் வதந்திகளை பகிரவும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.