முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்? நடிகை ஹேமா விளக்கம்!
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கியமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முடிவுக்கு வருகிறதா என ரசிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் கேட்ட கேள்விக்கு, அந்த சீரியல் நடிகை ஹேமா தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 664 எபிசோடுகளுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். வழக்கமான குடும்ப சண்டை, மாமியார் மருமகள் பிரச்சனை என்று இல்லாமல் ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிப்பது தான் இந்த சீரியலின் பலம் என்றே கூறலாம். இப்படிப்பட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தமிழ் மொழியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வந்தாலும், இந்த கதை மொழிகளை கடந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட உட்பட மேலும் சில மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கர்ப்ப காலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்!
சமீபத்தில் இந்த சீரியலின் இயக்குனர் மாறியிருப்பதால், கதையில் பல புது முகங்கள் அறிமுகமாகி, அந்த கதாப்பாத்திரமும் தொடருக்கு வலுசேர்த்துள்ளது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணனுக்கு, ஐஸ்வர்யா என்ற புது அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த ஜோடி தனது திருமணத்தை எதிர்பார்த்து வரும் கதைக்களம் வரும் நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் தனம், கண்ணனின் திருமணம் என எபிசோடுகள் ஒளிபரப்பாகுவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் சமூக வலைதளத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ரசிகர் ஒருவர் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தவாறு உள்ளது, இது உண்மையா என கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு பதிலளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா (மீனா), இந்த தகவல்கள் உண்மை இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர இன்னும் நாட்கள் இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த தகவலால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.